ஹதீஸ்கள்
#859
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டு, இரவின் ஒரு பகுதி ஆனதும் எழுந்து (சென்று), தொங்கவிடப்பட்டிருந்த தோல் பையி-ருந்து (தண்ணீர் எடுத்து) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “(உறுப்புகளை அதிகம் தேய்க்காமல் தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை மட்டுமே கழுவிய) நபி (ஸல்) அவர்களின் அந்த உளூ எளிமையாகவும் அதே சமயத் தில் மிகக் குறைந்த பட்ச அளவிலும் அமைந்திருந்தது” என்று சுட்டிக்காட்டினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் நின்று தொழுதார்கள். அப்போது நானும் எழுந்து அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டு வந்து, அவர்களின் இடப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே (தொழுதுகொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்த்தில் நிறுத்திக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து (ஃபஜ்ர்) தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது அவர்கள் எழுந்து அவருடன் தொழுகைக்குப் போய் தொழுவித்தார்கள். ஆனால், அவர்கள் (உறங்கியதற்காகப் புதிதாக) உளூ செய்யவில்லை. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் கண்கள் (மட்டுமே) உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது’ என்று மக்கள் கூறுகின்ற னரே! (அது உண்மையா?)” என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள், “இறைத்தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (வஹீ) ஆகும் என்று உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்றார்கள். பிறகு, “(மகனே!) உன்னை நான் அறுத்து (குர்பானி செய்து)விடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்” (37:102) எனும் இறை வசனத்தை (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக் காட்டினார்கள்80 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال اخبرنا سفيان، عن عمرو، قال اخبرني كريب، عن ابن عباس رضى الله عنهما قال بت عند خالتي ميمونة ليلة، فنام النبي صلى الله عليه وسلم فلما كان في بعض الليل قام رسول الله صلى الله عليه وسلم فتوضا من شن معلق وضوءا خفيفا يخففه عمرو ويقلله جدا ثم قام يصلي، فقمت فتوضات نحوا مما توضا، ثم جيت فقمت عن يساره، فحولني فجعلني عن يمينه، ثم صلى ما شاء الله، ثم اضطجع فنام حتى نفخ، فاتاه المنادي يوذنه بالصلاة فقام معه الى الصلاة، فصلى ولم يتوضا. قلنا لعمرو ان ناسا يقولون ان النبي صلى الله عليه وسلم تنام عينه ولا ينام قلبه. قال عمرو سمعت عبيد بن عمير يقول ان رويا الانبياء وحى ثم قرا {اني ارى في المنام اني اذبحك}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #859
- Book Index
- 250
Grades
- -
