ஹதீஸ்கள்
#855
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் ‘நம்மிடமிருந்து’ அல்லது ‘நமது பள்ளி வாசலிலிருந்து விலகியிருக்கட்டும்’; அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தமது இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிடவில்லை)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஸா-ஹ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரில் “வட்ட வடிவப் பாத்திரம் (பத்ர்) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது” என்று அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாகவும் ‘பத்ர்’ என்பது ‘காய்கறிகள் உள்ள தட்டையே’ குறிக்கும் என்று அதற்கு அவர் விளக்கம் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. லைஸ், அபூஸஃப்வான் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், பாத்திரம் சம்பந்தமான குறிப்பு இடம்பெறவில்லை. ஆகவே, அது அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் உரையா, அல்லது நபிமொழியின் மூலத்திலேயே உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #855
- Book Index
- 246
Grades
- -