ஹதீஸ்கள்
#848
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் கடமை யான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (கூடுதலான தொழுகை களைத்) தொழுவார்கள். (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரர்) காசிம் (ரஹ்) அவர்களும் இவ்வாறே செய்வார்கள். “இமாம் (கடமையான தொழுகையைத் தொழுவித்த) தமது இடத்திலேயே கூடுதலான தொழுகைகளைத் தொழக் கூடாது” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. அது ஆதாரபூர்வமானதன்று.76 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #848
- Book Index
- 240
Grades
- -