ஹதீஸ்கள்
#844
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு எழுதுமாறு என்னிடம் சொன்ன கடிதத்தில் பின்வரும் தகவலையும் குறிப்பிட்டிருந்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும், “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்- ஷையின் கதீர். அல்லாஹும்ம! லா மானிஅ -மா அஉதைத்த, வலா முஉத்திய -மா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்” என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் யாருமில்லை (எது மில்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ள வன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்ப வன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வம் உடைய எவருக்கும் அவரது செல்வம் உன்னிடம் எந்தப் பயனும் அளிக்க முடியாது.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்ஜத்’ எனும் சொல்லுக்கு ‘செல்வம்’ என்பது பொருள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #844
- Book Index
- 236
Grades
- -