ஹதீஸ்கள்
#837
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ‘சலாம்’ கொடுத்து முடித்த தும் பெண்கள் எழுந்து (சென்று)விடுவார் கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்குமுன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றி ருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில், “அல்லாஹ் நன்க றிந்தவன்! தொழுகை முடிந்து திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவதற்குமுன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிட வேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #837
- Book Index
- 230
Grades
- -