ஹதீஸ்கள்
#835
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருக்கும்போது, ‘அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலான்’ (அடியார் கள் சார்பாக அல்லாஹ்வுக்கு சலாம் உண்டாகட்டும்; இன்னார் இன்னாருக்கும் சலாம்) என்று கூறிக்கொண்டிருந்தோம். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “அல்லாஹ் வின் மீது சலாம் உண்டாகட்டும்” என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ்தான் ‘சலாம்’ (சாந்தி அளிப்பவன்) ஆக இருக்கின்றான். மாறாக, ‘(சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கை களும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் கள் அனைவர்மீதும் சலாம் உண்டா கட்டும்” எனக் கூறுங்கள். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதிகூறுகிறேன்” என்றும் கூறுங்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #835
- Book Index
- 228
Grades
- -