ஹதீஸ்கள்
#831
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது, ‘அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, வ மீக்காயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலான் வ ஃபுலான்’ (ஜிப்ரீல்மீதும் மீக்காயீல்மீதும் சாந்தி உண்டாகட்டும். இன்னார் மீதும் இன்னார்மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுபவர்களாக இருந்தோம். (தொழுகை முடிந்ததும்) எங்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி, “நிச்சயமாக அல்லாஹ் தான் ‘சலாம்’ (எனும் சாந்தி அளிப்பவன்) ஆவான். உங்களில் ஒருவர் தொழு(கை யின் அமர்வில் இருக்கு)ம்போது, “அத்தஹிய்யாத்து -ல்லாஹி வஸ்ஸல வாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மத் துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா, வ அலா இபாதில்லாஹிஸ் ஸா-ஹீன்” என்று கூறட்டும்! (பொருள்: சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் வழிபாடுகளும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர்மீதும் சாந்தி உண்டாகட்டும்.) இதை நீங்கள் கூறினால், வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடி யார்கள்மீதும் சலாம் கூறியதாக அமையும். “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதிகூறுகிறேன்) என்றும் கூறட்டும்!” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #831
- Book Index
- 225
Grades
- -