ஹதீஸ்கள்
#828
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக்கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தொழுகை (முறை) பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் (முதல்) தக்பீர் கூறும்போது தம் கைகளைத் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉ (குனிவு) செய்யும்போது தம் கைகளை முழங்கால்கள்மீது நன்கு ஊன்றிக்கொள்வார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக)ச் சாய்ப்பார்கள். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தும்போது, முதுகெலும்புகளில் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமிர்ந்து நிற்பார்கள். சஜ்தா செய்யும்போது அவர்கள் தம் கைகளைப் பரப்பி வைக்கவுமாட்டார்கள்; அவற்றை விலா வுடன் ஒடுக்கி வைக்கவுமாட்டார்கள்; கால்விரல் முனைகளைக் கிப்லாவை நோக்கி வைப்பார்கள். இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய் யாத் அமர்வில்) அமரும்போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக் காலை நட்டு வைப்பார்கள். இறுதி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காரும் போது இடக் காலை (குறுக்கு வாட்டில் வலப்புறம்) கொண்டுவந்து, வலக் காலை நட்டு வைத்து, தமது புட்டம் தரையில் படியுமாறு உட்காருவார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #828
- Book Index
- 222
Grades
- -