ஹதீஸ்கள்
#826
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகை யைத் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்தபோது ‘தக்பீர்’ கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து தலையை) உயர்த்திய போதும் ‘தக்பீர்’ கூறினார்கள்; இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் ‘தக்பீர்’ கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் சலாம் கொடுத்து முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘இவர் நமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்று தொழுவித்தார்’ அல்லது ‘இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا حماد بن زيد، قال حدثنا غيلان بن جرير، عن مطرف، قال صليت انا وعمران، صلاة خلف علي بن ابي طالب رضى الله عنه فكان اذا سجد كبر، واذا رفع كبر، واذا نهض من الركعتين كبر، فلما سلم اخذ عمران بيدي فقال لقد صلى بنا هذا صلاة محمد صلى الله عليه وسلم. او قال لقد ذكرني هذا صلاة محمد صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #826
- Book Index
- 220
Grades
- -
