ஹதீஸ்கள்
#824
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவி-ருந்த) எங்களிடம் மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, “உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை (இப்போது தொழுவது) என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுது காட்டுவதே என் நோக்கம்” என்று கூறிவிட்டு, எங்களது இப்பள்ளிவாச-ல் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இதன் அறிவிப்பாளரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்போது நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், “மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “இதோ இந்தப் பெரியவர்-அம்ர் பின் சலிமா அவர்கள் -தொழுவதைப் போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள். அய்யூப் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: அந்தப் பெரியவர் தக்பீரை முழுமை யாகக் கூறுவார். இரண்டாவது சஜ்தாவிலி ருந்து எழும்போது அமர்ந்துவிட்டு, பூமியில் (கைகளை) ஊன்றி பின்பு எழுவார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #824
- Book Index
- 218
Grades
- -