ஹதீஸ்கள்
#821
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் பார்த்ததைப் போன்று நான் உங்களுக்குத் தொழுவிப்பதில் எந்தக் குறையும் வைக்கமாட்டேன்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்தபோது) ஒன்னறச் செய்தார்கள். ஆனால், அதை நீங்கள் செய்வதை நான் பார்த்ததில்லை. அனஸ் (ரலி) அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தி (நீண்ட நேரம்) நிற்பார்கள். எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார் கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம். இரு சஜ்தாக்களுக்கு இடையிலும் அவர்கள் (நீண்ட நேரம் அமர்ந்திருப்பார்கள்). எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #821
- Book Index
- 215
Grades
- -