ஹதீஸ்கள்
#813
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, “எங்களுடன் தாங்கள் பேரீச்சந்தோட்டத்திற்கு வரக் கூடாதா? நாம் (அங்கு சென்று) பேசிக்கொண்டி ருக்கலாமே!” என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அவர்களிடம்) நான், “லைலத்துல் கத்ர் (எனும் மகத்தான இரவு) குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்” என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இஃதிகாஃப் இருந்தோம். அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “நீங்கள் தேடக்கூடிய (லைலத்துல் கத்ர் ஆன)து உங்களுக்கு எதிர்வரும் நாட்களில் உள்ளது” என்றார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்து நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர்வரும் நாட்களில் உள்ளது” என்று கூறினார்கள். ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்: யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார் களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில், லைலத் துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கும்படி செய்யப்பட்டேன். நிச்சயமாக அது இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி மண்ணில் சஜ்தா செய்வதைப் போன்று (கனவு) கண்டேன். (அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாச-ன் கூரை, பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. வானத்தில் (மழைக் கான அறிகுறி) எதையும் நாங்கள் காணவில்லை. (இவ்வாறிருக்க) திடீரென ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண் படிந்திருந்ததைக் கண்டேன். இது அவர்களது கனவை மெய்ப்படுத்துவதாக அமைந்தது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #813
- Book Index
- 208
Grades
- -