ஹதீஸ்கள்
#811
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவ ரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியதும், அவர்கள் (சஜ்தாவிற்குச் சென்று) நெற்றியைத் தரையில் வைக்காத வரை எங்களில் யாரும் (சஜ்தாவிற்காக) தமது முதுகை வளைக்கமாட்டார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن عبد الله بن يزيد الخطمي، حدثنا البراء بن عازب وهو غير كذوب قال كنا نصلي خلف النبي صلى الله عليه وسلم فاذا قال سمع الله لمن حمده. لم يحن احد منا ظهره حتى يضع النبي صلى الله عليه وسلم جبهته على الارض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #811
- Book Index
- 206
Grades
- -
