ஹதீஸ்கள்
#805
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தாம் பயணம் செய்த) குதிரையி-ருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது வலப் பக்கத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. இதையொட்டி நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிடவே, அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். நாங்களும் அமர்ந்து கொண்டோம் -சுஃப்யான் (ரஹ்) அவர் களின் மற்றோர் அறிவிப்பில் ‘நாங்கள் அமர்ந்தவாறே தொழுதோம்’ என்று இடம்பெற்றுள்ளது.- அவர்கள் தொழுகையை முடித்ததும், “பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள்; அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால், நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்களிடம், “இவ்வாறுதான் மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (இவ்வாறே அறிவித்தார்கள்)” என்று பதிலளித்தார்கள். உறுதியாக மஅமர் (ரஹ்) அவர்கள், (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இதை (நன்கு) மனனமிட்டார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் (ருகூஉவிலிருந்து எழும்போது கூற வேண்டிய துதிச் சொல்லை) ‘வ ல(க்)கல் ஹம்த்’ என்றே அறிவித்தார்கள். மேலும், (நபி (ஸல்) அவர்களுக்குச் சிராய்ப்பு ஏற்பட்டது தொடர்பாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து), “நபி (ஸல்) அவர்களின் வலப் பக்கத்தில் (சிராய்ப்பு ஏற்பட்டது)” என்றே நான் மனனமிட்டேன். நாங்கள் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றபோது இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள், “நான் ஸுஹ்ரீ அவர்களுக்கு அருகில் இருந்தேன்; ‘நபி (ஸல்) அவர்களது வலப் பக்க கணைக்கா-ல் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது’ என்றே அறிவித்தார்கள்” எனக் குறிப்பிட்டார்கள் அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا سفيان، غير مرة عن الزهري، قال سمعت انس بن مالك، يقول سقط رسول الله صلى الله عليه وسلم عن فرس وربما قال سفيان من فرس فجحش شقه الايمن، فدخلنا عليه نعوده، فحضرت الصلاة، فصلى بنا قاعدا وقعدنا وقال سفيان مرة صلينا قعودا فلما قضى الصلاة قال " انما جعل الامام ليوتم به، فاذا كبر فكبروا واذا ركع فاركعوا، واذا رفع فارفعوا، واذا قال سمع الله لمن حمده. فقولوا ربنا ولك الحمد. واذا سجد فاسجدوا ". قال سفيان كذا جاء به معمر قلت نعم. قال لقد حفظ، كذا قال الزهري ولك الحمد. حفظت من شقه الايمن. فلما خرجنا من عند الزهري قال ابن جريج وانا عنده فجحش ساقه الايمن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #805
- Book Index
- 200
Grades
- -
