ஹதீஸ்கள்
#804
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தும் போது ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்; ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்த் (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறியபின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களு(டைய நலனு)க்காகப் பிரார்த்திப்பார்கள். அப்போது “இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபிஆ ஆகியோரையும் இறைநம்பிக்கையாளர்களில் பலவீனர்களையும் காப்பாற்றுவாயாக! இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத் தூதர்) யூசுஃப் அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று (இவர்களுக்கும்) அளிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள். (மதீனாவுக்கு) கிழக்கில் வாழ்ந்த ‘முளர்’ குலத்தார் அன்று நபி (ஸல்) அவர்களுக்கு எதிரிகளாய் இருந்தனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #804
- Book Index
- 199
Grades
- -