ஹதீஸ்கள்
#803
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்), அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (மதீனாவின் ஆளுநராயிருந்தபோது) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கடமை யான தொழுகைகளிலும் அஃதல்லாத (கூடுதல்) தொழுகைகளிலும் ரமளான் மாதத்திலும் ரமளான் அல்லாத மாதத்திலும் ஒவ்வொரு தொழுகையிலும் ‘தக்பீர்’ கூறுவார்கள். அதாவது (தொழுகைக்காக) நின்றதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (ருகூஉவி-ருந்து நிமிரும்போது) ‘சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறுவார்கள். பிறகு சஜ்தா செய்வதற்குமுன் (நின்று கொண்டு) ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! உனக்கே புகழனைத்தும் உரியன) என்று கூறுவார்கள். பின்னர் சஜ்தாவுக்காகத் தாழும்போது ‘அல்லாஹு அக்பர்’ என்று (தக்பீர்) கூறுவார்கள். பிறகு சஜ்தாவி-ருந்து (சிறு அமர்வுக்காக) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் (இரண்டாவது) சஜ்தா செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சஜ்தாவி-ருந்து தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்து விட்டு (மூன்றாவது ரக்அத்திற்காக) எழும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகை முடியும்வரை ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறே செய்வார்கள். தொழுகை முடிந்ததும், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழு வதில் உங்களிலேயே நான்தான் மிகவும் சரியாகத் தொழுபவன் ஆவேன். இவ்வுலகைப் பிரியும்வரை இதுவே நபி (ஸல்) அவர்களின் தொழுகையாக இருந்தது” என்று குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال حدثنا شعيب، عن الزهري، قال اخبرني ابو بكر بن عبد الرحمن بن الحارث بن هشام، وابو سلمة بن عبد الرحمن ان ابا هريرة، كان يكبر في كل صلاة من المكتوبة وغيرها في رمضان وغيره، فيكبر حين يقوم، ثم يكبر حين يركع، ثم يقول سمع الله لمن حمده. ثم يقول ربنا ولك الحمد. قبل ان يسجد، ثم يقول الله اكبر. حين يهوي ساجدا، ثم يكبر حين يرفع راسه من السجود، ثم يكبر حين يسجد، ثم يكبر حين يرفع راسه من السجود، ثم يكبر حين يقوم من الجلوس في الاثنتين، ويفعل ذلك في كل ركعة حتى يفرغ من الصلاة، ثم يقول حين ينصرف والذي نفسي بيده اني لاقربكم شبها بصلاة رسول الله صلى الله عليه وسلم ان كانت هذه لصلاته حتى فارق الدنيا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #803
- Book Index
- 198
Grades
- -
