ஹதீஸ்கள்
#802
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூகிலாபா (அப்துல்லாஹ் பின் ஸைத் -ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எப்படித் தொழு வார்கள் என எங்களுக்கு மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் (தொழுது)காட்டினார்கள். இ(வ்வாறு அவர்கள் செய்து காட்டிய)து எந்தத் தொழுகையின் நேரத்திலும அல்ல. அப்போது அவர்கள் (நன்கு) நிலை கொண்டு நின்றார்கள். பின்னர் ருகூஉ செய்தார்கள். ருகூஉவையும் நிறுத்தி நிதானமாகச் செய்தார்கள். பின்னர் தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் அசையாமல் நின்றார்கள். அவர்கள் இதோ நம்முடைய இந்தப் பெரியவர் அபூபுரைத் (ரஹ்) அவர்கள் தொழுவதைப் போன்று எங்களுக்குத் தொழுதுகாட்டினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபுரைத் (அம்ர் பின் சலிமா-ரஹ்) அவர்கள் (தொழுகையின் இரண்டாவது) சஜ்தாவி-ருந்து தலையை உயர்த்தியதும் (சற்று நேரம்) நேராக அமர்ந்திருப்பார். பிறகுதான் எழுவார். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابي قلابة، قال كان مالك بن الحويرث يرينا كيف كان صلاة النبي صلى الله عليه وسلم وذاك في غير وقت صلاة، فقام فامكن القيام، ثم ركع فامكن الركوع، ثم رفع راسه فانصت هنية، قال فصلى بنا صلاة شيخنا هذا ابي بريد. وكان ابو بريد اذا رفع راسه من السجدة الاخرة استوى قاعدا ثم نهض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #802
- Book Index
- 197
Grades
- -
