ஹதீஸ்கள்
#797
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள், “கிட்டத்தட்ட நபி (ஸல்) அவர்கள் தொழு வித்ததைப் போன்றே உங்களுக்கு நான் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் இறுதி ரக்அத்தில் (ருகூஉவி-ருந்து எழுந்து) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியபிறகு, ‘குனூத்’ (சோதனை காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆதரவாகவும் (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள். அத்தியாயம் :
حدثنا معاذ بن فضالة، قال حدثنا هشام، عن يحيى، عن ابي سلمة، عن ابي هريرة، قال لاقربن صلاة النبي صلى الله عليه وسلم. فكان ابو هريرة رضى الله عنه يقنت في الركعة الاخرة من صلاة الظهر وصلاة العشاء، وصلاة الصبح، بعد ما يقول سمع الله لمن حمده. فيدعو للمومنين ويلعن الكفار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #797
- Book Index
- 192
Grades
- -
