ஹதீஸ்கள்
#793
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் வந்து, (ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை முழுமையாக்காமல்) தொழுதார். பிறகு அவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு முகமன் (சலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் (சலாம்) சொல்-விட்டு, “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர் (திரும்பிச் சென்று முன்பு போலவே அவசர அவசரமாகத்) தொழுது விட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘சலாம்’ சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர், “சத்திய (மார்க்க)த் துடன் உங்களை அனுப்பியவன் மீதாணை யாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த் தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நீர் தொழுகைக்காக நின்றதும் (அல்லாஹு அக்பர் என) தக்பீர் கூறு வீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉ வில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு (ஆற அமர நிதானத்துடன்) ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு அமர்வில் உட்காருவீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் (மீண்டும்) சிரவணக்கம் செய்வீராக! பிறகு இதையே (இதே வழிமுறையையே) உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக! அத்தியாயம் :
حدثنا مسدد، قال اخبرني يحيى بن سعيد، عن عبيد الله، قال حدثنا سعيد المقبري، عن ابيه، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل فصلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فرد النبي صلى الله عليه وسلم عليه السلام فقال " ارجع فصل فانك لم تصل " فصلى، ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال " ارجع فصل فانك لم تصل ". ثلاثا. فقال والذي بعثك بالحق فما احسن غيره فعلمني. قال " اذا قمت الى الصلاة فكبر، ثم اقرا ما تيسر معك من القران، ثم اركع حتى تطمين راكعا، ثم ارفع حتى تعتدل قايما، ثم اسجد حتى تطمين ساجدا، ثم ارفع حتى تطمين جالسا، ثم اسجد حتى تطمين ساجدا، ثم افعل ذلك في صلاتك كلها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #793
- Book Index
- 188
Grades
- -
