ஹதீஸ்கள்
#789
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால், நின்ற நிலையில் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉவி-ருந்து தமது முதுகை உயர்த் தும்போது சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கி றான்) என்று கூறுவார்கள். பிறகு நின்ற நிலையில் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியன) என்பார்கள். -(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘ரப்பனா வல(க்)கல் ஹம்த்’ என்று இடம்பெற்றுள்ளது.- பின்னர் (சஜ்தாவுக்காகக்) தாழும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (அந்த சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு தொழுகையை முடிக்கும்வரை தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் இவ்வாறே செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் முதல்) அமர்வை முடித்து எழும்போதும் தக்பீர் கூறுவார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #789
- Book Index
- 184
Grades
- -