ஹதீஸ்கள்
#788
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மக்காவில் ஒரு பெரியவருக்குப் பின்னால் (லுஹ்ர் தொழுகை) தொழுதேன். (அத்தொழுகையில்) அவர், இருபத்து இரண்டு தக்பீர்கள் கூறினார். இது குறித்து நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகையில், “அவர் ஓர் அறிவி-” என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உன் தாய் உன்னை இழக்கட் டும்; (அது) அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களின் வழிமுறைதான்” என்று கூறினார்கள்.61 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال اخبرنا همام، عن قتادة، عن عكرمة، قال صليت خلف شيخ بمكة فكبر ثنتين وعشرين تكبيرة، فقلت لابن عباس انه احمق. فقال ثكلتك امك، سنة ابي القاسم صلى الله عليه وسلم. وقال موسى حدثنا ابان حدثنا قتادة حدثنا عكرمة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #788
- Book Index
- 183
Grades
- -
