ஹதீஸ்கள்
#787
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள) ‘மகாமு இப்ராஹீம்’ அருகில் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதரை நான் கண்டேன். அவர் ஒவ்வொரு முறை குனியும் போதும் நிமிரும்போதும் எழும்போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். (விளக்கம் கேட்கும் விதமாக இது குறித்து) நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், “தாயற்றுப்போவாய்! அது நபி (ஸல்) அவர்கள் தொழுத தொழுகை (போன்று) இல்லையா?” என்று கேட்டார்கள்.60 அத்தியாயம் :
حدثنا عمرو بن عون، قال حدثنا هشيم، عن ابي بشر، عن عكرمة، قال رايت رجلا عند المقام يكبر في كل خفض ورفع واذا قام واذا وضع، فاخبرت ابن عباس رضى الله عنه قال اوليس تلك صلاة النبي صلى الله عليه وسلم لا ام لك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #787
- Book Index
- 182
Grades
- -
