ஹதீஸ்கள்
#759
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தையும் (ஒரு ரக்அத்தில் ஓர் அத்தியாயம் வீதம்) வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். (அவ்விரு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள். அஸ்ர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) அல்ஃபாத்திஹா அத்தியாத்தையும் வேறு இரு அத்தி யாயங்களையும் ஓதுவார்கள். முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். அவ்வாறே, சுப்ஹு தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #759
- Book Index
- 153
Grades
- -