ஹதீஸ்கள்
#754
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபூபக்ர் (ரலி) அவர்கள் இமாமாக நிற்க) முஸ்-ம்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது (உடல் நலமில்லாமல் இருந்த) நபி (ஸல்) அவர்கள் (திடீரென எட்டிப்பார்த்து) மக்களைத் திகைப்புள்ளாக்கிவிட்டார்கள். (இதன் விவரம் வருமாறு:) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் திரையை விலக்கித் தொழுகையில் அணிவகுத்து நின்றுகொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (அறையி-ருந்து) வெளியே வர விரும்புகிறார்கள் என்று எண்ணிய அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர் களுக்காக (இடம் விட்டு), (முதல்) வரிசை யில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் வந்தார்கள். (நபி (ஸல்) அவர்களைத் திரும்பிப் பார்த்த மகிழ்ச்சியினால்) மக்கள் தமது (கவனம் சிதறி) தொழுகையில் குழப்பம் நேர்ந்துவிடுமோ என எண்ணலாயினர். உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து, “உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்” என்று சைகை செய்துவிட்டு (அறைக்குள் நுழைந்து) திரையைத் தொங்க விட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியிலேயே அவர்கள் இறந்துவிட்டார்கள்.46 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، قال حدثنا ليث بن سعد، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني انس، قال بينما المسلمون في صلاة الفجر لم يفجاهم الا رسول الله صلى الله عليه وسلم كشف ستر حجرة عايشة فنظر اليهم وهم صفوف، فتبسم يضحك، ونكص ابو بكر رضى الله عنه على عقبيه ليصل له الصف فظن انه يريد الخروج، وهم المسلمون ان يفتتنوا في صلاتهم، فاشار اليهم اتموا صلاتكم، فارخى الستر، وتوفي من اخر ذلك اليوم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #754
- Book Index
- 148
Grades
- -
