ஹதீஸ்கள்
#749
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஒரு தொழுகையை)த் தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது ஏறி பள்ளிவாச-ன் கிப்லா திசையில் சைகை செய்தவாறு, “உங்களுக்கு நான் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது இந்த (முன்) சுவரின் திசையில் சொர்க்கம் மற்றும் நரகத்தின் தோற்றம் காட்சியளிப்பதைக் கண்டேன். நன்மை தீமை(களின் விளைவு)களை இன்று போல் என்றும் நான் கண்டதில்லை” என மூன்று முறை கூறினார்கள்.44 அத்தியாயம் :
حدثنا محمد بن سنان، قال حدثنا فليح، قال حدثنا هلال بن علي، عن انس بن مالك، قال صلى لنا النبي صلى الله عليه وسلم ثم رقا المنبر، فاشار بيديه قبل قبلة المسجد ثم قال " لقد رايت الان منذ صليت لكم الصلاة الجنة والنار ممثلتين في قبلة هذا الجدار، فلم ار كاليوم في الخير والشر " ثلاثا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #749
- Book Index
- 143
Grades
- -
