ஹதீஸ்கள்
#714
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் நான்கு ரக்அத் தொழுகை யொன்றை) இரண்டு ரக்அத்களில் முடித்து விட்டார்கள். அப்போது அவர்களிடம் ‘துல்யதைன்’ (நீண்ட கைகளை உடையவர்) என்பவர், “தொழுகை(யின் ரக்அத்) சுருக் கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “துல்யதைன் சொல்வது உண்மைதானா?” என்று (மக்களிடம்) கேட்க, மக்கள் ‘ஆம்’ என்று பதிலளித்த னர். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று இன்னும் இரண்டு ரக்அத்களைத் தொழு(வித்)துவிட்டு ‘சலாம்’ கொடுத்தார்கள். பிறகு ‘தக்பீர்’ கூறி (வழக்கமாக) ‘தாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று’ அல்லது ‘(அதைவிட) நீண்ட நேரம்’ (மறதிக்குரிய) சிரவணக்கம் செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك بن انس، عن ايوب بن ابي تميمة السختياني، عن محمد بن سيرين، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم انصرف من اثنتين، فقال له ذو اليدين اقصرت الصلاة ام نسيت يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم " اصدق ذو اليدين ". فقال الناس نعم. فقام رسول الله صلى الله عليه وسلم فصلى اثنتين اخريين ثم سلم، ثم كبر فسجد مثل سجوده او اطول
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #714
- Book Index
- 109
Grades
- -
