ஹதீஸ்கள்
#702
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்குச் செல்லாமல் நான் தாமதித்து விடுகிறேன் (ஜமாஅத்திற்குச் செல்வதில்லை.)” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய (தினத்தில் ஆற்றிய) உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், “(மக்களே!) உங்களில் வெறுப்பூட்டுபவர்கள் சிலர் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும். ஏனெனில், (பின்பற்றித் தொழும்) மக்களில் முதியவர்களும் பலவீனர்களும் அலுவல் உடையவர் களும் உள்ளனர்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #702
- Book Index
- 97
Grades
- -