ஹதீஸ்கள்
#682
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இறுதி நாட்களில் நோயின்) வேதனை அதிகமானபோது, தொழுகை யைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “அபூபக்ர் அவர்களி டம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “(என்தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடைய மனிதர். (நீங்கள் நிற்கு மிடத்தில் நின்று) அவர்கள் குர்ஆன் ஓதி னால். அவர்களுக்கு அழுகை மே-ட்டு விடும்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று (மீண்டும்) கூறி னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் முன்பு சொன்னதையே மீண்டும் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் (முன்பு போன்றே) “அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு, “(பெண்களாகிய) நீங்கள் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக் கத்துடன் பேசுகின்)றவர்கள்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، قال حدثنا ابن وهب، قال حدثني يونس، عن ابن شهاب، عن حمزة بن عبد الله، انه اخبره عن ابيه، قال لما اشتد برسول الله صلى الله عليه وسلم وجعه قيل له في الصلاة فقال " مروا ابا بكر فليصل بالناس ". قالت عايشة ان ابا بكر رجل رقيق، اذا قرا غلبه البكاء. قال " مروه فيصلي " فعاودته. قال " مروه فيصلي، انكن صواحب يوسف ". تابعه الزبيدي وابن اخي الزهري واسحاق بن يحيى الكلبي عن الزهري. وقال عقيل ومعمر عن الزهري عن حمزة عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #682
- Book Index
- 76
Grades
- -
