ஹதீஸ்கள்
#681
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (இறுதியாக அமர்ந்து எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டுப் போனதி-ருந்து) மூன்று நாட்கள் வெளியில் வரவில்லை. (மூன்றாவது நாள்) தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன்சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது அறையின்) திரையை உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் தெரிந்தபோது (நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். எந்த அளவுக்கென்றால்,) எங்களுக்குக் காட்சியளித்த அவர்களின் முகத்தைவிட மகிழ்வூட்டும் எந்தக் காட்சியையும் நாங்கள் கண்டதில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் (பின்வாங்க முற்பட்ட) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் முன்னே செல்லுமாறு (மக்களுக்குத் தொழுவிக்குமாறு) தமது கரத்தால் சைகை செய்தார்கள். (பிறகு அறையின்) திரையைத் தொங்கவிட்டுவிட்டார்கள். பின்னர் அதற்குக்கூட இயலாமல் இறந்துவிட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #681
- Book Index
- 75
Grades
- -