ஹதீஸ்கள்
#680
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களை (ஒவ்வொரு விஷயங்களிலும்) பின்பற்றுபவரும், நபியவர்களின் சேவகருமான அவர்களின் தோழர் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எந்த நோயில் நபி (ஸல்) அவர்கள் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அபூபக்ர் (ரலி) அவர்களே மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். மக்கள் திங்கட்கிழமையன்று (ஃபஜ்ர்) தொழுகையில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களது) அறையின் திரையை விலக்கி, நின்றுகொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களது முகம் புத்தகத்தின் பக்கத்தைப் போன்று (பொ-வுடன்) இருந்தது. பிறகு அவர்கள் (எங்களைப் பார்த்து) மகிழ்ந்தவர்களாய் புன்னகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியினால் நாங்கள் (தொழுகையில் கவனம் சிதறி) குழம்பிவிடுவோமா என்று எண்ணிணோம். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்து கொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வருகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி, “உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்” என்று (தமது கரத்தால்) சைகை செய்தார்கள்; (பிறகு அறைக்குள் நுழைந்துகொண்டு) திரையைத் தொங்க விட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #680
- Book Index
- 74
Grades
- -