ஹதீஸ்கள்
#679
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால், அவர்கள் (மனம் நெகிழ்ந்து) அழுவதால் மக்களுக்கு அவர்களால் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களை, மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினேன். மேலும், (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) ஹஃப்ஸாவிடம், “அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால், (மனம் நெகிழ்ந்து) அழுவதால் மக்களுக்கு அவர்கள் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களை, மக்களுக்கு தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும்படி சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸா அவர்கள் செய்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(போதும்) நிறுத்துங்கள். நிச்சயமாக நீங்கள்தான் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம், “உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை” என்று கூறினார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #679
- Book Index
- 73
Grades
- -