ஹதீஸ்கள்
#678
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தமது இறுதி காலத்தில்) நோய்வாய்ப்பட்டார்கள். அவர் களது நோய் கடுமையானபோது, “அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்” என்று (தம் அருகில் இருந்தவர்களிடம்) கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர். (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால், (மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவார்கள். எனவே) அவர்களால் மக்களுக்குத் தொழுவிக்க முடியாது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆயிஷா முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு, “(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்” என்று கூறினார்கள்.22 (நபி (ஸல்) அவர்களின்) தூதுவராக ஒருவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (தொழுவிக்கும்படி) சொன்னார். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது (அவர்கள் இறக்கும்வரை) மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தி னார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن نصر، قال حدثنا حسين، عن زايدة، عن عبد الملك بن عمير، قال حدثني ابو بردة، عن ابي موسى، قال مرض النبي صلى الله عليه وسلم فاشتد مرضه فقال " مروا ابا بكر فليصل بالناس ". قالت عايشة انه رجل رقيق، اذا قام مقامك لم يستطع ان يصلي بالناس. قال " مروا ابا بكر فليصل بالناس " فعادت فقال " مري ابا بكر فليصل بالناس، فانكن صواحب يوسف ". فاتاه الرسول فصلى بالناس في حياة النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #678
- Book Index
- 72
Grades
- -
