ஹதீஸ்கள்
#677
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களது இந்த (பஸ்ரா) பள்ளி வாசலுக்கு மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, “உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமை யான) தொழுகையை (இப்போது) தொழுவது என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை, எவ்வாறு நான் தொழக் கண்டேனோ அவ்வாறு நான் தொழுது காட்டப்போகிறேன்” என்று கூறி(விட்டு தொழுதுகாட்டி)னார்கள். இதன் அறிவிப்பாளர் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) எவ்வாறு தொழுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இதோ (அம்ர் பின் சலமா எனும்) இந்தப் பெரியவரைப் போன்றே தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அம்ர் பின் சலமா (ரஹ்) அவர்கள் முதியவராக இருந்தார். அவர்கள் முதல் ரக்அத்தி-ருந்து இரண்டாவது ரக்அத் திற்காக எழுவதற்குமுன் (சிறிது நேரம்) அமர்ந்துவிட்டு எழுவார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #677
- Book Index
- 71
Grades
- -