ஹதீஸ்கள்
#670
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் தொழ முடிவதில்லை” என்று கூறினார்- அவர் உடல் பருமனான மனிதராக இருந்தார். -எனவே, அவர் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயார் செய்து தமது இல்லத்திற்கு வருமாறு அவர்களை அழைத்தார். (அவரது இல்லத்திற்கு நபி (ஸல்) அவர்கள் வந்தபோது) நபி (ஸல்) அவர்களுக்காகப் பாயொன்றை விரித்து, (பதப்படுத்துவதற்காக) அந்தப் பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். அந்தப் பாயில் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஜாரூத் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுபவர்களாக இருந்தார்களா?” என்று கேட்டார். அதற்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுவதை நான் கண்டதில்லை” என்று கூறினார்கள்.19 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #670
- Book Index
- 64
Grades
- -