ஹதீஸ்கள்
#669
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் (லைலத்துல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவு பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: (திடீரென) ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அதனால் பள்ளிவாச-ன் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அப்போது அந்தக் கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்(டு தொழுகை நடத்தப்பட்)டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரமான களி மண்ணில் சிரவணக்கம் (சஜ்தா) செய்ததால் அவர்களது நெற்றியில் களி மண்ணின் அடையாளத்தை நான் கண்டேன். அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، قال حدثنا هشام، عن يحيى، عن ابي سلمة، قال سالت ابا سعيد الخدري فقال جاءت سحابة فمطرت حتى سال السقف، وكان من جريد النخل، فاقيمت الصلاة، فرايت رسول الله صلى الله عليه وسلم يسجد في الماء والطين، حتى رايت اثر الطين في جبهته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #669
- Book Index
- 63
Grades
- -
