ஹதீஸ்கள்
#668
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மழை பெய்து) சேறும் சகதியும் நிறைந்திருந்த ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்க ளிடையே உரையாற்றினார்கள். பாங்கு சொல்பவர், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்)’ என்று சொல்ல முனைந்தபோது, “(உங்கள்) இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அஸ்ஸலாத்து ஃபிர்ரிஹால்) என்று மக்களுக்கு அறிவிக்குமாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கட்டளை யிட்டார்கள். அப்போது மக்கள் அதை ஆட்சேபிப்பதைப் போன்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இவ்வாறு நான் செய்தது உங்களுக்குப் பிடிக்கவில்லை போன்று தெரிகிறது. ஜுமுஆ கட்டாயக் கடமையாக இருந்தும் என்னைவிடச் சிறந்தவர் -நபி (ஸல்) அவர்கள்- இவ்வாறுதான் செய்தார்கள். உங்களுக்குச் சிரமம் கொடுப்பதை நான் விரும்பவில்லை. (எனவேதான், இருப்பிடங்களிலேயே தொழச் சொன்னேன்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “நீங்கள் முழங்கால்வரை சகதியை மிதித்துக்கொண்டு வருமளவுக்கு உங்களுக்குச் சிரமம் கொடுப்பதை நான் விரும்பவில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #668
- Book Index
- 62
Grades
- -