ஹதீஸ்கள்
#666
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள்.. பிறகு “ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங் களிலேயே நீங்கள் தொழுதுகொள் ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபிர்ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், “(கடுங்) குளிரும் மழையு முள்ள இரவுகளில், “ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளருக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடு வார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.18 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #666
- Book Index
- 60
Grades
- -