ஹதீஸ்கள்
#665
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகி வேதனை அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற் காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள்; அவர்களும் நபியவர்களுக்கு அனுமதியளித்தனர். நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டில் தங்கியிருக்கையில் ஒரு நாள்) தம் இரு கால்களும் பூமியில் இழுபட இரு மனிதர் களுக்கிடையே தொங்கியபடி (தொழுகைக் குப்) புறப்பட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறொரு மனிதருக்கும் இடையில்தான் (தொங்கியபடி) சென்றார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: இ(வ்வாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய)தை நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம், “ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை (தெரியாது)” என்று பதிலளித்தேன். அவர்கள், “அந்த மனிதர் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள்தான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #665
- Book Index
- 59
Grades
- -