ஹதீஸ்கள்
#661
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மோதிரம் எதையும் அணிந்திருந்தார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம்; நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவுவரைத் தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து (எங்களுடன்) தொழுதுவிட்டுப் பின்னர் எங்களை நோக்கி, “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள். இப்போதும் நான் நபியவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة، قال حدثنا اسماعيل بن جعفر، عن حميد، قال سيل انس هل اتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما فقال نعم، اخر ليلة صلاة العشاء الى شطر الليل، ثم اقبل علينا بوجهه بعد ما صلى فقال " صلى الناس ورقدوا ولم تزالوا في صلاة منذ انتظرتموها ". قال فكاني انظر الى وبيص خاتمه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #661
- Book Index
- 55
Grades
- -
