ஹதீஸ்கள்
#659
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தாம் தொழும் இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர் பார்த்து) சிறுதுடக்கு ஏற்படாமல் காத்திருக் கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள். “இறைவா! இவருக்கு மன்னிப்பு வழங்கு வாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று (அவர்கள் கூறு கின்றனர்). தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால், அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்ப தாகவே கருதப்படுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #659
- Book Index
- 53
Grades
- -