ஹதீஸ்கள்
#644
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் விறகுக் கட்டைகளைக் கொண்டுவருமாறு ஆணை பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகை அறிவிப்புச் செய்யுமாறு பணித்துவிட்டு, பின்னர் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுவிக்குமாறு சொல்லிவிட்டு, பின்னர் (கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத) சில மனிதர்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்து விட வேண்டும் என்று எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரு கால் குளம்புகளோ கிடைக்கும் என்று தெரிந்தால்கூட அவர் இஷா தொழுகையில் கட்டாயம் கலந்துகொள்வார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " والذي نفسي بيده لقد هممت ان امر بحطب فيحطب، ثم امر بالصلاة فيوذن لها، ثم امر رجلا فيوم الناس، ثم اخالف الى رجال فاحرق عليهم بيوتهم، والذي نفسي بيده لو يعلم احدهم انه يجد عرقا سمينا او مرماتين حسنتين لشهد العشاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #644
- Book Index
- 41
Grades
- -
