ஹதீஸ்கள்
#606
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவில்) மக்களின் எண்ணிக்கை அதிகமானபோது அவர்கள் அறிந்திருக் கின்ற ஏதேனும் ஓர் (அறிவிப்பு) முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்துகொள்ள (அல்லது அறிவிப்புச் செய்திட) ஆலோசித்தனர். அப்போது, “நெருப்பு மூட்டலாம்; அல்லது மணி அடிக்கலாம்” என்று (பல்வேறு யோசனைகளைத்) தெரிவித்தனர். ஆனால், பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும், (‘கத் காமத்திஸ் ஸலாத்’ எனும் வாசகத்தை தவிர) இகாமத்தின் (இதர) வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லும்படி பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அத்தியாயம் :
حدثنا محمد، قال اخبرنا عبد الوهاب، قال اخبرنا خالد الحذاء، عن ابي قلابة، عن انس بن مالك، قال لما كثر الناس قال ذكروا ان يعلموا وقت الصلاة بشىء يعرفونه، فذكروا ان يوروا نارا او يضربوا ناقوسا، فامر بلال ان يشفع الاذان وان يوتر الاقامة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #606
- Book Index
- 4
Grades
- -
