ஹதீஸ்கள்
#576
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் (ஒன்றாக நோன்பு நோற்க) சஹர் உணவு உட் கொண்டனர். அவர்கள் இருவரும் சஹர் செய்து முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து (சென்று) தொழுதார்கள். (இதன் அறிவிப்பாளரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அவர்கள் இருவரும் சஹர் உணவு உட்கொண்டு முடிப்பதற்கும் தொழுகை யில் ஈடுபடுவதற்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஒரு மனிதர் ஐம்பது இறைவசனங்கள் ஓதும் அளவு நேரம் (இடைவெளி இருந்தது)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #576
- Book Index
- 52
Grades
- -