ஹதீஸ்கள்
#573
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பௌர்ணமி இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் நிலாவைக் கூர்ந்து பார்த்தபடி, “அறிந்து கொள்ளுங்கள்! இந்த நிலாவை நீங்கள் ‘நெரிசல் இல்லாமல்’ அல்லது ‘குழப்பமடையாமல்’ காண்பதைப் போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும், சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால், அவ்வாறே செய்யுங்கள் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறினார்கள். “சூரியன் உதயமாகும் முன்னரும் மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” (50:39) எனும் இறைவசனத்தை ஓதி(க்காட்டி)னார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن اسماعيل، حدثنا قيس، قال لي جرير بن عبد الله كنا عند النبي صلى الله عليه وسلم اذ نظر الى القمر ليلة البدر فقال " اما انكم سترون ربكم كما ترون هذا، لا تضامون او لا تضاهون في رويته، فان استطعتم ان لا تغلبوا على صلاة قبل طلوع الشمس، وقبل غروبها فافعلوا ". ثم قال " فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #573
- Book Index
- 49
Grades
- -
