ஹதீஸ்கள்
#572
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள் இரவு) இஷா தொழுகையைப் பாதி இரவுவரை தாமதப்படுத்தினார்கள். பிறகே தொழு(வித்)தார்கள். பின்னர், “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். அறிந்துகொள்ளுங்கள்: ஒரு தொழுகைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கும்வரை நீங்கள் அத்தொழு கையிலேயே உள்ளீர்கள் (என்றே கருதப்படும்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.21 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அன்றிரவு நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னியதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள் ளது” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள் எனக் கூடுதலாக இடம்பெற் றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الرحيم المحاربي، قال حدثنا زايدة، عن حميد الطويل، عن انس، قال اخر النبي صلى الله عليه وسلم صلاة العشاء الى نصف الليل، ثم صلى ثم قال " قد صلى الناس وناموا، اما انكم في صلاة ما انتظرتموها ". وزاد ابن ابي مريم اخبرنا يحيى بن ايوب حدثني حميد سمع انسا كاني انظر الى وبيص خاتمه ليلتيذ
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #572
- Book Index
- 48
Grades
- -
