ஹதீஸ்கள்
#567
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் (யமன் நாட்டி-ருந்து) என்னு டன் கப்பலில் வந்த என் தோழர்களும் (மதீனாவிலிருந்த) ‘பகீஉ புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தார்கள். ஒவ்வோர் இரவும் இஷா தொழுகை நேரத்தில் எங்களில் ஒரு குழுவினர் முறைவைத்து நபி (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். (எனது முறை வந்தபோது) நானும் என் தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற நேரம் அவர்கள் (போர் ஆயத்தம் சம்பந்தப்பட்ட) ஒரு விவகாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் நள்ளிரவு நேரமாகும்வரை இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து மக்களுக்கு இஷா தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்தபோது வந்திருந் தோரை நோக்கி, “அப்படியே இருங்கள். நற்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, ‘இந்த நேரத்தில் உங்களைத் தவிர மக்களில் வேறு யாரும் தொழ வில்லை’ அல்லது ‘இந்த நேரத்தில் உங்க ளைத் தவிர வேறு யாரும் தொழவில்லை’ என்று கூறினார்கள் -இந்த இரண்டு வாக்கியங்களில் எதை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று எனக்குத் தெரிய வில்லை.- இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து செவியுற்ற இந்த விஷயத் தைக் கேட்டுப் பேருவகையடைந்தவர் களாக நாங்கள் திரும்பினோம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #567
- Book Index
- 44
Grades
- -