ஹதீஸ்கள்
#565
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
முஹம்மத் பின் அம்ர் பின் அல்ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் தொழுகை (நேரம்) பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் நண்பக-ல் லுஹ்ர் தொழுகையைத் தொழுவார்கள். சூரியன் (ஒளி குறையாமல்) தெளிவாக இருக்கும்போது அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள். (அதிக) மக்கள் குழுமிவிட்டால் இஷாவை விரைவாக (அதன் முன்னேரத்திலேயே) தொழுவார்கள்; மக்கள் குறைவாக இருந்தால் தாமதப்படுத்தித் தொழுவார்கள். சுப்ஹு தொழுகையை இருள் இருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்குமுன்பே) தொழுவார்கள்.18 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #565
- Book Index
- 42
Grades
- -