ஹதீஸ்கள்
#560
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
முஹம்மத் பின் அம்ர் பின் ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மதீனாவின் ஆட்சியராக) வந்தார் (அவர் தொழுகை களைத் தாமதப்படுத்தி தொழுவித்தார்).13 அப்போது நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் பற்றிக்) கேட்டோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் நண்பக-ல் லுஹ்ர் தொழுவார்கள். சூரியன் (வெளிச் சமோ வெப்பமோ குறையாமல்) தெளிவாக இருக்கும்போது அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் (பின்னேரத்திலும்) சில நேரம் (முன்னேரத்திலுமாகச் சூழ்நிலைக்குத் தக்கவாறு) தொழுவார்கள். மக்கள் (முன்னேரத்திலேயே) குழுமியிருக்கக் கண்டால், ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். மக்கள் தாமதமாக வரக் கண்டால் தாமதப்படுத்துவார்கள். சுப்ஹு தொழுகையை ‘மக்கள்’ அல்லது ‘நபி (ஸல்) அவர்கள்’ இருள் இருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்கு முன்பே) தொழு பவர்களாய் இருந்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #560
- Book Index
- 37
Grades
- -