ஹதீஸ்கள்
#558
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்-ம்கள், யூதர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் நிலை, (குறிப்பிட்ட கூ-க் குக் காலையி-ருந்து) இரவுவரை தமக்கு வேலை செய்வதற்காக ஒரு மனிதரால் அமர்த்தப்பட்ட கூட்டத்தாரின் நிலையை ஒத்திருக்கிறது. (அவர் முத-ல் ஒரு குழுவினரை கூ-க்கு அமர்த்தினார்;) அவர்கள் நண்பகல்வரை வேலை செய்துவிட்டு, “எங்களுக்கு உமது கூ- தேவையில்லை” என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் இன்னொரு குழுவினரைக் கூ-க்கு அமர்த்தி, “இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தி செய்யுங்கள். (முதலாவது குழுவின ருக்கு) நான் தருவதாகப் பேசிய கூ-யை உங்களுக்குத் தருகிறேன்” என்றார். அதன்படி அவர்கள் வேலை செய்ய(த் தொடங்கி) அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தபோது, “உமக்காக நாங்கள் செய்த வேலை (வீணாகட்டும்)” என்றனர். எனவே, அந்த மனிதர் மற்றொரு குழுவினரை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் அன்று (அஸ்ரி-ருந்து) சூரியன் மறையும்வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால் அவர்கள் முத-ரண்டு குழுவினரின் கூ-யையும் (சேர்த்து) முழுமையாகப் பெற்றுக்கொண்டனர்.11 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو كريب، قال حدثنا ابو اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى، عن النبي صلى الله عليه وسلم " مثل المسلمين واليهود والنصارى كمثل رجل استاجر قوما يعملون له عملا الى الليل، فعملوا الى نصف النهار، فقالوا لا حاجة لنا الى اجرك، فاستاجر اخرين فقال اكملوا بقية يومكم، ولكم الذي شرطت، فعملوا حتى اذا كان حين صلاة العصر قالوا لك ما عملنا. فاستاجر قوما فعملوا بقية يومهم حتى غابت الشمس، واستكملوا اجر الفريقين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #558
- Book Index
- 35
Grades
- -
