ஹதீஸ்கள்
#557
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்த சமுதாயத்தாரோடு நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடுகையில் நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது, அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவே ஆகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. (அதன்படி) அவர்கள் நண்பகல்வரை செயல்பட்டார் கள். பின்னர் ஓய்ந்துபோனார்கள். (கூலி யாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பட்டது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகைவரை செயல்பட்டு விட்டுப் பின்னர் ஓய்ந்துபோனார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப்பட்டது. பிறகு நமக்கு குர்ஆன் வழங்கப் பெற்றது. நாம் (அஸ்ரிலிருந்து) சூரியன் மறையும்வரை (அதன்படி) செயல்பட் டோம். நமக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கப்பட்டன. எனவே, வேதம் அருளப்பெற்ற அவ்விரு சமுதாயத்தாரும், “எங்கள் இறைவா! இவர்களுக்கு இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு கீராத் வழங்கியுள்ளாயே? நாங்கள் (இவர்களைவிட) அதிக நேரம் வேலை செய்திருந்தோமே?” என்று வினவினர். அதற்கு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “உங்களுக் குரிய கூ-யில் ஏதேனும் நான் (குறைத்து) உங்களுக்கு அநீதி இழைத்திருக்கிறேனா?” என்று கேட்டான். அவர்கள் “இல்லை” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து, எனது அருட்கொடை; நான் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறேன்” என்று கூறினான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #557
- Book Index
- 34
Grades
- -